சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்தமக்கள் -அரச பஸ்கள் மூலம்அனுப்பி வைப்பு
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப
முடியாமலிருந்த மலையக பிரதேசத்தைச்சேர்ந்த பலர் நேற்று தமது சொந்த இடங்களுக்கு பயணமானார்கள்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் ஹட்டன் மற்றும் நுவரெலிய பிரதேசங்களுக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்..
மேல் மாகாணத்தில் பணிபுரிந்த இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் பணியிடங்களில் தங்கியிருந்த இவர்கள்
இரத்மலானை ரயில் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மருத்துவ பரிசோதனைக்குப்பின்னர் பயணமானார்கள் .
இவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தத்திற்கான சான்றிதழை ஹட்டன் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.