சொத்து தகராறில் தாய்,மகள் குத்திக்கொலை

Spread the love

சொத்து தகராறில் தாய்,மகள் குத்திக்கொலை


ஆந்திர மாநில குண்டூர் மாவட்டம் சத்தனப்பள்ளி நாகார்ஜூனா நகரை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது30). இவருக்கும் இவரது பெரியம்மா வெங்கடசுகுணா பத்மாவதிக்கும் (43) சொத்து தகராறு இருந்து வந்தது.

இது தொடர்பாக சீனிவாசராவ் தனது பெரியம்மா வெங்கடசுகுணா பத்மாவதி வீட்டுக்கு அவ்வப்போது சென்று தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சொத்து பிரச்னை பற்றி பேசலாம் என்று கூறி வெங்கடசுகுணா பத்மாவதி வீட்டுக்கு சென்ற சீனிவாசராவ் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆவேசமடைந்த சீனிவாசராவ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து வெங்கடசுகுணா பத்மாவதி, அவரது மகள் லட்சுமி(23) ஆகியோரை குத்தி கொலை செய்தார்.

சீனிவாசராவிடம் இருந்து தப்புவதற்காக அவர்கள் 2 பேரும் போராடினர். ஆனாலும் பலனில்லாமல் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த சீனிவாசராவ் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அங்கு வசிக்கும் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

    Leave a Reply