யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

Spread the love

யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று

முன்தினம் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர்

பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்தச் சேத விவரங்கள்

பதிவாகியுள்ள அதேவேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply