சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா
போகம்பரை பழைய சிறைச்சாலையின் சிறைக் காவலர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை மூலமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட இவர்கள் தெல்தெனிய சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.