சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது
Spread the love

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது

களுத்துறை மாகாணத்தின் கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியில் வைத்து நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்தவரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (17) இரவு களுத்துறை, கல்லஸ்ஷேன பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த வேளையில் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது

சந்தேகநபர் இன்று (18) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு களுத்துறை, கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை, பலாதொட, கொடபரகாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய திருமணமாகாத சுஜித் தர்மசேன என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது தலை மற்றும் கழுத்து பகுதிக்கு கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

No posts found.