சினம்கொள் – ஈழத்துத் தமிழ்த்திரைப்படக்காட்சிகள் பற்றிய விபரம்!!
முப்பதாண்டுகளாக சிறுக சிறுக கட்டமைத்த தேசத்தின் வாழ்வோடு வாழ்ந்த மக்களின் உணர்வுகள் மறக்கப்பட்டுவருவதாக
பரப்பப்படும் மாயைகளுக்கு மத்தியில், இன்னமும் அந்த வேட்கை உயிர்ப்போடு வெவ்வேறு தளங்களில் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றது என்ற உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும் ஓர் உன்னத படைப்பாக வெளிவந்துள்ளது சினம்கொள் என்ற ஈழத்துத் திரைப்படம்.
ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆதரவு கொடுக்கப்பட்டு வெளியீடு
செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது.
முதற்கட்டத் திரையிடல்கிளின் பின் பெருவாரியான வரவேற்பையும் ஆதரவையும் பாராட்டையும் பெற்ற
இத்திரைப்படம் அவுஸ்திரேலிய நகரங்களில் திரையிடப்படும் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி கண்டு களிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்கிறார்கள்.
திரையிடல் மூலம் திரப்பட்டடும் நிதியானது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும்.