சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பாதால உலக குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
தெற்கில் இடம்பெற்ற பல குற்றங்களுடன், இவர் தொடர்புடைய சந்தேகநபர்களில் இவரும் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்ளனர்,
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்