நிரஞ்சனி தம்பதியினருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர் தேசிங் பெரியசாமி – நிரஞ்சனி தம்பதியினருக்கு தயாரிப்பாளர் ஒருவர் விலையுயர்ந்த கார் பரிசளித்து இருக்கிறார்.
தேசிங் பெரியசாமி – நிரஞ்சனி தம்பதியினருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
தேசிங் பெரியசாமி – நிரஞ்சனி
கடந்த வருடம் துல்கர் சல்மான், ரீது வர்மா, இயக்குனர் கௌதம் மேனன், ரக்ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான படம்
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.
நிரஞ்சனிக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
கார் பரிசளித்த தயாரிப்பாளர்
திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், புதுமணத் தம்பதிக்கு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தயாரிப்பாளர்
ஆன்டோ ஜோசப் ஒரு காரை திருமண பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.