சகல ஆரம்பப் பாடசாலைகளும் இன்று ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொவிட் நிலை முழுமையாக ஒழியவில்லை. இதனால், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துதல் அவசியமாகும்.
சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே செய்து கொடுக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறுவர்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டு, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளை விட்டு வீட்டிற்கு வந்தவுடனேயே, குளித்தல் அவசியமாகும். அவ்வாறே ஆடைகளையும் உடனடியாக சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
அரசாங்க மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தற்சமயம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று ஒன்பதாயிரத்து 100க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.