கோட்டா பசில் விமான நிலையத்தில் இருந்து துரத்தியடிப்பு
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபாக்ஸ தனது குடும்பத்தினருடன் கட்டுநாயாக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்பொழுது அவரை அங்கிருந்து சுங்க சோதனை அதிகாரிகள் சோதனையிட மறுத்து அவரை திருப்பி அனுப்பினர்.
இதனால் பலத்த சீற்றத்துடனும் அவமானத்துடனும் கோட்டபாய இராணுவ விமான படை தளம் ஒன்றுக்கு பாதுகாப்புடன் தப்பி சென்றுள்ளார் .
இதே போல பசில் ராஜபக்ச வந்திருந்த பொழுதும் அவரும் இவ்விதம் துரத்தியடிக்க பட்டுள்ளார் .
இவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்வதை தடுக்கவே இந்த நகர்வை சிங்கள பணியாளர்கள் துணிவுடன் மேற்கொண்டனர்.
இலங்கை நாட்டை கொள்ளையடித்து சுகபோக வாழ்ககை வாழ்ந்து வந்த கோத்தபாய நாய்கள் போல் விரட்டியடிக்க பட்டுள்ள சம்பவம் இலங்கை அரசியல் வாதிகளிற்கு சிறந்த பாடமாக அமைய பெற்றுள்ளது.
மக்கள் ஓட்டை பெற்று லஞ்ச ஊழல் மோசடி புரிந்து சுகபோக வாழ்க்கை வாழும் அரசியல் வாதிகளிற்கு எதிர் காலத்தில் மக்கள் வழங்க போகும் சாட்டையடி இதன் ஊடாக மீளவும் உறுதிப்படுத்த பட்டுள்ளது