கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்
இலங்கை செய்திகள்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே 73 தாவது பிறந்த நாளில் காலிமுக திடலில் புத்துயிர் பெறும் போராட்டம் .
கடந்த தினம் இரவு ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுக திடல் கோட்டா கோ காம திடலில் விஷேட கொட்டகைகள் அமைக்க பட்டு மக்கள் கோட்டபாய ராஜபக்சே 73 தாவது பிறந்தநாளுக்கு அதிர்ச்சிகர பரிசாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த போராட்ட களத்தில் உள்ள மக்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.
இந்த கோட்டபாய ராஜபக்சே அரசாங்கத்தை நாம் துரத்தியடித்து புதியவரை இந்த நாட்டுக்கு நியமிக்க வேண்டும் என அந்தமக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம் காரணமாக நாடு மீள செயல் இழக்கும் நிலக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.
தொடரும் இந்த போராட்டம் காரணமாக மீளவும் பலத்த அவமானத்தை சந்தித்த வண்ணம் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படும் என போராட்டக்கார்கள் ஆவசேமாக முழங்கி வருகின்றனர்
இதன் எதிர் திசை செயல் நோக்கு காலிமுக திடல் கோட்டா கோ காம போராட்டம் உச்சம் பெற போவதை எடுத்துரைக்கிறது .