கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்

Spread the love

கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் டொலர் பற்றாக்குறையால் மூன்று நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இந்த கப்பல்களிலுள்ள எரிபொருளை உடனடி ஒழுங்கு முறையின் கீழ் அரசாங்கம் இறக்குமதி செய்த போதிலும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள்

கிடைக்காததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு டீசல் கப்பலும் பெற்றோல் கப்பலொன்றும் தொடர்ந்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டால், எரிபொருளுக்கான நிறுத்தக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது பத்து நாட்களுக்கு மாத்திரமே பெற்றோலும் 7 நாட்களுக்கும் மட்டுமே டீசலும் கையிருப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினார்.

இந்த நிலையில் எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    Leave a Reply