கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், கொழுக்கட்டை, மோதகம்
போன்றது என்று வியாக்கியானம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடிவங்கள் மாறியுள்ளன எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர்,பயங்கரவாத தடைச்சட்டத்தால், ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்த பல போராளிகள் காணாமல் போயுள்ளனர். ஒப்படைக்கப்பட்ட கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்டது. அதனூடாக நீங்கள் அடைந்த நன்மைகள் என்ன? சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதால் மட்டுமே போதாது என்றார்.