கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.
இன்றைய தினம் (2020.04.19) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் உறுதி செய்யப்பட்ட 15 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இந்த நோயாளர்கள் 15 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களுடன்
நெருக்கமாக தொடர்பை கொண்டிருந்ததினால் கொழும்பு பிரதேசத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.