கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்துள்ளனர்- அரசு அறிவிப்பு
கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்றைய தினத்தில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட
புதிய நோயாளர் எவரும் பதிவாகவில்லை என்று அரசாங்க தகல் திணைக்களம்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 511 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தில் இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 863ஆகும்.
நேற்றைய தினத்தில் (2020.05.10) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின்
எண்ணிக்கை 1282 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங்காணப்பட்ட
நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆகும்.என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.