கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது..
இன்றைய தினத்தில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று புதிய நோயாளர்களின்; எண்ணிக்கை 96ஆகும்.
இந்த நோயாளர்களில் 88 பேர் குவைட் நாட்டிலிருந்து வந்த பின்னர் மின்னேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய
நிலையங்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள். ஏனைய
8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டடுள்ள கடற்படை அங்கத்தவர்களாவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான
மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.