கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

Spread the love

கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

குவைட்டில் இருந்து வந்து கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்

ஒருவருக்கு மீண்டும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று அனுராதபுரம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று

உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.

குறித்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர்

கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் நேற்று

முன்தினம் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

      Leave a Reply