கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19
தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண
குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி
அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.
- தலைகீழாக கவிழ்ந்த கார்
- மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
- பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
- லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
- இராணுவத்தில் சிறை கைதிகள்
- 11 இஸ்ரேல் தளபதிகள்பலி
- பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
- இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
- இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
- இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்