கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதற்கு இனிவரும் காலங்களில் 5,000 ரூபாயை அறவிடப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
25ஆம் திகதி நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய 15,000 ரூபாய் நோர்வூட் பிரதேச சபையால் அறிவிடப்பட்டு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகவும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தான் ஒரு மாத சிகிச்சையின் பின்னர், சபைக்கு திரும்பிய பின்னரே இது குறித்து அறிந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, இனிவரும் காலங்களில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய 5,000 ரூபாயை மாத்திரமே அறவிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.