கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை

Spread the love

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலின் தற்போதைய நிலையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.


அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று தீ

பற்றிக்கொண்டமை. தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கடற்படையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தீ பற்றிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் பட்சத்தில், அதிலிருந்து சுற்றாடலை

பாதுகாக்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எரிபொருளை உறிஞ்சக் கூடிய கருவிகளை பயன்படுத்துவதற்கும், தெற்காசிய பிராந்திய நாடுகளின் உதவிகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கப்பலில் ஏற்பட்ட தீ எண்ணெய் களஞ்சியசாலையை நோக்கி பரவுவதை தடுக்க முயற்சி செய்து வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.

தீயை அணைப்பதற்கு எட்டுக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இழுவைக் கப்பல்கள் மூன்றும்

அடங்குவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டீ சில்வா குறிப்பிட்டார்.

இந்தக் கப்பலிலுள்ள இரண்டரை இலட்சம் பீப்பாக்களுக்கு மேலான எரிபொருட்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

தீ பரவியுள்ள ஆவு நேற னுயைஅழனெ கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை

Leave a Reply