கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்

Spread the love

கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில்

இழந்தவர்கள் மற்றும் மேன் முறையீடு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் வழங்கும் பணி இன்று ஆரம்பமானது.

பிரிவு உத்தியோகத்தர்கள் குறித்த தொகையினை வழங்கி வருகின்றனர்.

2020 ஆண்டு மே மாதத்தில் சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவைப் பெறுபவர்களில் தகுதியான 24040 குடும்பங்களுக்கான

கொடுப்பனவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் இழந்தவர்கள் மற்றும் மேன்

முறையீடு செய்தவர்கள் என்ற அடிப்படையில் 10564 பயனாளிகளுமாக 34604 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கொடுப்பனவு நடவடிக்கை எதிர்வரும்

29.05.2020 ஆம் திகதி வரை தொடரும் என கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில், சமுர்த்தி,
கிளிநொச்சியில், சமுர்த்தி,

      Leave a Reply