கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகி 8 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சிக்கிய பேரூந்து சேதம் ,
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதியுள்ளது.
விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்