கிண்ணியா வை காணவில்லை

கிண்ணியா வை காணவில்லை
Spread the love

கிண்ணியா வை காணவில்லை

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வைகைபுயல் வடிவேல் ஒரு படைத்தில், கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தார். அந்த நகைச்சுவை வைரலாகியது. அதேபோன்ற சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா- தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட ‘கிண்ணியா’ எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை

கிண்ணியா வை காணவில்லை

சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த குறித்த பெயர்ப் பலகை இன்மையால், கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியை இனங்கண்டுக்கொள்வதில், வெளியில் இருந்து வரும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக நடப்பட்ட குறித்த பெயர் பலகை பலமாத காலமாக காணாமல் போயுள்ளது.

இது தவிர புதிதாக அமைக்கப்பட்ட பல காபட் வீதிகளுக்கான முறையான பெயர் பலகையும் அமைக்கப்படவில்லை. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பாதசாரிகள் வீதிகளை தேடியும் அங்கும் இங்கும் அலைகின்றனர். எனவே, இது தொடர்பில் உரிய சபை நடவடிக்கை எடுத்து வீதிகளுக்கான பெயர் பலகைகளை நடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.