காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது
இலங்கை ; இலங்கையில் எரிபொருள் பெற்றிட எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நின்ற 13 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்படுத்தி அமைதியின்மை விளைவித்தனர் என்கின்ற குற்ற சாட்டில் இந்த அப்பாவி மக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.