காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!
உள்நாட்டு போர் வெடிக்க
ஊந்துகணை வாசல் விழ
கதறி வாய் குழற
கால் பிடித்து நாமோட
சிங்களத்து வாசலிலே
சிறை பட்டு நான்கிடக்க
ஓடி வந்தென்னை
ஒத்திக்கு எடுத்தவரே
வேரூன்றி யான் நிமிர
வேண்டுதல் செய்தவரே
உன்செயல் கடன்தீர்க்க
உள்ளத்தால் முடியலையே
ஆண்டு பல கடந்திருச்சு
ஆனாலும் இயலையே
மறந்துவிட்டேன் என்றே
மனதில் நினைத்திருப்பாய்
ஆவி பிரியு முன்னே
அக்கடனை யான் முடிப்பேன்
உன் செயல் யான் மறப்பின்
உலகம் அழிந்து விடும்
விரைவில் கை பேசி
விடயம் பகிரும்
அன்று வியப்பாய்
அழுதே களைப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 23-12-2021
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்