சொல்லாமல் வந்த காதல் .!
பெற்றவரை நீ இழந்து
பேரழகே வாடையில…..
நெஞ்சமெலாம் வேகுதடி
நினைவிழந்து சாகுதடி……
ஒற்றையிலே நீ இருந்து
ஓரமா அழுகிறியே ….
சாத்தியமா உனை காக்க
சம்பந்தம் செய்யலேயே …..
தேடி வந்த வேளையிலே – என்
தேதியில நீ இல்ல …
வேரறுத்து போகையில- நீ
வேறாகி போனாயே …
தங்கிட தான் துடித்தேண்டி
தவமாய் தவித்தேண்டி …
விதி வந்து விளையாட
விலகி நீ போனாயே …
இன்ரழுது துடித்தேண்டி
ஈர் விழியால் உடல் நனைத்தேண்டி …
என்னழகே உனை தேற்றிடவே
என்ன யான் செய்திடுவேன் …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/05/2019