வலிந்துகாணாமல்ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி …..!!!
ஸ்ரீலங்கா இனவாத படைகளால்
திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும்
காணாமல் ஆக்க பட்டும் இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியாமல் அவதிபட்டு கொண்டிருக்கும்
எம்மின மக்களுக்கு நீதி வேண்டி திங்கள் கிழமை
(30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டன் Trafalgar Square national gallery க்கு முன்பு பிரித்தானியாவிலுள்ள
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினரும் (Freedom Hunters For Tamils )அவர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்பினரும் (TGTE) இணைந்து
மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை
ஒழுங்கு செய்திருந்தனர் .இந்த பேரணி கோவிட் விதிக்களுக்கு அமைய மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.