கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Spread the love

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (24) மாலை கஹட்டகஸ்திகிலிய, குடாபட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய பிரதேசத்தில் விவசாய கிணற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

விசாரணையில், இறந்தவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.