கண்டியில் புதிய கொரனோ மருத்துவமனை
கண்டி, குண்டசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் இடைநிலை சிகிச்சை மத்திய நிலையம் சுகாதார பிரிவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பதுக்கு இடம்பெறவுள்ளது.இந்த நிகழ்வில்
வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்
கொவிட் வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயல்திட்டதின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுவரும்
இடைநிலை சிகிச்சை நிலைய திட்டத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம்
நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதிகளை இந்த மத்திய நிலையம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.