கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை
மத்திய நிலையமொன்றை அமைக்க தீர்மானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Pஊசு பரிசோதனை மத்திய
நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம்
திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதன்போது, PCR பரிசோதனை மத்திய நிலையத்தையும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார்.
இதனடிப்படையில், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய விமான
நிலையத்தில் தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.