கடலில் நீந்தி தமிழகம் சென்ற வாலிபர்
இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்றிட பயணித்த படகு மீது ஐந்தாவது தீவில் வைத்து சிங்கள படை சூடு நடத்தியது .
இதில் பயமுற்ற அவர் ,கடலில் குதித்து நீந்தி தமிழகம் கரையை சேர்ந்துள்ளார் .
கடலில் ஒருவர் நீந்தியபடி பயணிப்பதாக, கடல் படைக்கு மீனவர்கள் தகவல் வழங்கியதை அடுத்து , கடல் படையினர் அவரை மீட்டு கரை சேர்த்தனர் .
கடற்படையினர் நடத்திய விசாரணைகளின் பொழுதே ,தமக்கு நடந்த விடயத்தை அவர் தெரிவித்தார் .
மன்னார் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய, கான் என்பவரே இவ்வாறு நீந்தி கரை சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது .
இவரது குடும்பம் மண்டபம் மற்றும் பிறிதொரு முகாமில் உள்ளதாக கடகில் நீந்திய கான் தெரிவித்துள்ளார் .