கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்

Spread the love

கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்

யாழ்ப்பாணம், மாதகல்- குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன்

குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின்

தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு

பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.

அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக

அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை ,

கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன

    Leave a Reply