கடற்படைத் தளபதி பிரதமரை சந்திப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று (ஜூலை 13, 2020) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்
பாரம்பரிய சந்திப்பு நேற்று (ஜூலை 13, 2020) நடைபெற்றது. பிரதமர் கடற்படைத் தளபதியுடன் நல்லுறவு உரையாடி, கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலம் வாழ்த்தினார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், இந்த நிகழ்வைக் குறிக்கும்
வகையில் கடற்படைத் தளபதியும் பிரதமருக்கும் இடையே நினைவு பரிசும் பரிமாற்றப்பட்டது.