கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை

Spread the love

கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை

கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரகப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடா்பாக தொடா்ந்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

தமிழக அரசு தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையத்தை தமிழக அரசே திறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத் தேரை கடந்த அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது. இந்த தங்கத் தேரின் சீரமைப்புப்

பணிகளை விரைந்து மேற்கொள்ள கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Leave a Reply