ஒருத்தியின் கதறல் ….!

Spread the love

ஒருத்தியின் கதறல் ….!

மஞ்சள் தாலி தந்தவரே
மாயமான தென்ன …?
மஞ்சம் ஏறி கொஞ்சி தழுவி
மங்கை மறந்த தென்ன …?

உருகி விழியில் நீரும் வடிய
உருகி அணைத்தாய் என்னை – இன்று
உருகி கதற வைத்தேன் என்னை
உயிரே மறந்து சென்றாய் …?

பருகி முடித்து பாதியில் விட்டு
பாவை கதற சென்றாயே – இன்னல்
பார்த்தும் என்னை ஈர்த்து செல்ல
பாசமே உன்னை ஊந்தலையோ …?

ஒரு நாள் உன்னை மரணம் தீண்டும்
ஒரு நொடி என்னை உணர்வாய் – நீ
ஊற்றிய ஊழ்வினை உன்னை வதைக்க
உள்ள வலிகள் புரிவாய் …..

அதுவரை ஆடு ஆட்டம் போடு
ஆண்டவன் தண்டனை இடுவான் …
வேசி என்றே ஊரும் நகைக்க
வெந்து வெந்தே சாகிறேன் ….!

  • வன்னிமைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -01/12/2018
Home » Welcome to ethiri .com » ஒருத்தியின் கதறல் ….!

Leave a Reply