ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்

Spread the love

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு திங்கட்கிழமை (28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் (03) உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் குழு நேற்று ஜெனிவாவுக்கு சென்றுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்

    Leave a Reply