ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

Spread the love

ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

பொய் சொல்லிட்டார் எனக்கூறி தன்னுடைய ஐந்து வயதான மகளின் வாயில் சூடுவைத்து, கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


வாயை சுற்றியும் தொடைப்பகுதியிலும் கடுமையான சூட்டுக்காயங்களுக்கு உள்ளான அச்சிறுமி, அக்கராயன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கோபமடைந்த அத்தாய், கையிலிருந்த பீங்கானை சூடாக்கி, ஐந்து வயதான மகளின் வாயைச் சுற்றியும், தொடைகளிலும் இவ்வாறு சூடு வைத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்தே சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு பொலிஸாரினால் அச்சிறுமி மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

    Leave a Reply