ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்
Spread the love

ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

பொலிஸ் மா அதிபரின் (IGP) பொது நிவாரண நாள் நிகழ்ச்சி இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று பொலிஸ் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐஜிபியின் நிவாரண நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் ஐஜிபி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து தீர்வு காணப்படாத முறைப்பாடுகளுக்கு தீர்வு காண முடியும்.

வீடியோ