ஏ9 வீதியில் கோர விபத்து : மாணவன் உட்பட மூவர் படுகாயம்

Spread the love

ஏ9 வீதியில் கோர விபத்து : மாணவன் உட்பட மூவர் படுகாயம்

வவுனியா கண்டி வீதியில் இன்று (05.02) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன்

உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின்

கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த

நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் இரு துவிச்சக்கரவண்டிகளும் பட்டாரக வாகனத்தின் சில்லினுள் அகப்பட்டு முழுமையாக

சேதமடைந்துள்ளதுடன் பட்டாரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொருப்பதிகாரி காமினி திஸாநாயக்க

தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏ9 வீதியில் கோர விபத்து
ஏ9 வீதியில் கோர விபத்து

Leave a Reply