ஏக்கம் ஒன்று தவிக்கிறது

Spread the love

ஏக்கம் ஒன்று தவிக்கிறது

கவிதை ஒன்று பாடவா – உந்தன்
காதில் வந்து கூற வா ..?
நீயும் நானும் ஒண்ணு தானே- எந்தன்
நினைவில் உந்தன் கண்ணு தானே …

ஆடைகளை அவிழ்க்கும் உந்தன்
பார்வையாலே நோகிறேன் – என்னை
ஆட வைக்கும் உந்தன்
ஞானத்தாலே தவிக்கிறேன் ….

கேள்விகளை தெளிக்கும் உந்தன்
சிரிப்பினிலே துடிக்கிறேன் – என்னை
சீண்டி பார்க்கும் உந்தன்
சில்மிசத்தால் வாடுறேன் …..

வேக வைத்து பார்த்து என்ன
தேவைதேயே காண்கிறாய் ..?
வேகம் தரும் நினைவு ஊட்டி
வேகமாக மறைகிறாய் …..

ஏக்கம் ஒன்று தவிக்கிறது
ஏக்கம் ஒன்று தவிக்கிறது

ஏனோ உன்னை நான் தேட
ஏங்க விட்டு செல்கிறாய் …?
எரியும் எந்தன் நினைவில் உன்னை
ஏற்றி வைத்தென் பார்க்கிறாய் …?

ஆவி உயிர் நோக தானோ
அழகு மயில் விடுவதோ …?
ஆராரோ பாடும் நாளை
அருகில் தர கூடாதோ …?

  • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -30/06/2018
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply