ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் தளர்வுகள்

Spread the love

ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் தளர்வுகள்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்ட

நடைமுறைகளில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்று (14) முதல் தினந்தோறும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்

சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வந்தது.

அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையில்லாமல்

நடத்தில் செல்லல் மற்றும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும்

வகையில் இவ்வாறு தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

      Leave a Reply