ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு
ரூ.5,000 கொடுப்பனவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக, 400 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
“இந்த கொடுப்பனவை செவ்வாய்க்கிழமை முதல் வழங்குவதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.