உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்
Spread the love

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நாசி (மூக்கு) வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்ததை தொடர்ந்து, இந்திய குடியரசு தினமான நேற்று (26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தனர்.

இந்த மருந்து இந்திய நாணயத்தில் , அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும்,
தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No posts found.