உயிரே இதயம் மாறாதே
உன் முகம் என் விழியில்
ஊர்வலம் போகுதே
உள்ளம் மட்டும் ஏனோ
உனக்காய் ஏங்குதே ….
தவம் என்ன கொண்டாயோ – இதயம்
தந்திட மறுக்கிறாய் …?
வரம் என்ன சொல்லிடு
வாங்கி தந்திட மாட்டேனோ ..?
ஓடும் நதி எல்லாம்
கடலில் தானே கலக்குதே
ஆண்கள் மனம் எல்லாம்
அடி பெண்ணில் தானே மிதக்குதே
வீசும் காற்றிலே
வீதி எங்கும் குப்பையே
கொட்டும் மழையிலே
கொடும் கறைகள் கழுவதே
இயற்கை நிலைகளோ
இது தான் காணாய்
இதயம் தந்திட – நீ
இன்று ஏனோ மறுக்கிறாய் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் -09-11-2020