வடகொரியா 560 km சென்று தாக்கும் ஏவுகணை சோதனை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள
நிலையில் வடகொரியா தனது இராணுவ சோதனையில் தீவிரம் காட்டி வருகிறது
இவ்விதம் கடந்த தினம் 560 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை புரிந்துள்ளது
இந்த ஏவுகணையானது ஜப்பான் கொரிய கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது
வடகொரியாவின் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது