ஈழம் மலரும் காத்திரு
இறந்தவர் கல்லறை உடைத்த கேவலன்
இவனா இலங்கா கோமகன் ..?
படைத்தவன் பிரம்மன் படைப்பினை அறிவான்
பலியுன்னை எடுக்க வருவான்
அறுக்கையில் தலைகளை
அழுதன குரல்கள்
அவை கண்ணீர் சாபம் விடுமா ..?- உன்
அரியணை இங்கு தொடருமா ..?
எரியும் நெஞ்சின்
எரிமலை பிழம்புகள்
எழுந்தே ஒரு நாள் ஆடும்
எங்களின் தேசம் மலரும்
விடுதலை என்றுமே சாகாது – அதன்
விதிகள் என்றுமே மாறாது
செய்தவன் பலியது தீர்க்காது
செந்தமிழ் என்றுமே உறங்காது
இனக்கொலை புரிந்த உன்னோடு
இணைந்து வாழ்தல் முறைகேடு
தனியது அரசை தமிழ் அமைக்கும்
தரணியில் இதற்கொரு இடம் கிடைக்கும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-01-2021