ஈரானில் 35 மில்லியன் மக்கள் கொரனோ வைரஸால் பாதிக்க படுவார் – வேகமாக பரவும் இரண்டாம் கட்ட கொரனோ
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி பல நாடுகள் மீள முடியாத பெரும் ஆபாயத்தில் சிக்கி வருகின்றன
அவ்விதம் ஈரானும் கடுமையாக பாதிக்க பட்டுள்ளது
82 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஈரான் நாட்டில் எதிர்வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் 35 மில்லியன்
மக்கள் பாதிக்க படும் பேரவலம் எழுந்துள்ளதாக ஈரான் தலைமை அதிபர் Hassan Rouhani தெரிவித்துள்ளார்
சுகாதார துறையின் அபாய அறிவிப்பு ,மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் உலக நாடுகளில் இரண்டாவது கட்ட கொரனோ நோயானது தாக்கும் எனவும்
இதனால் தற்போது இடம்பெற்றதை விட மூன்று மடங்கு அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படும் என நிபுனர்கள் அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
அவ்விதம் பிரிட்டனும் இதில் சிக்கி தவிக்கும் என பிரிட்டன் நிபு னர்கள் எச்சரித்துள்ளனர்
கடைகள் பூட்ட பட்டு ஊரடங்கு பிறப்பிக்க படும் நிலை ஏற்படும் எனவும்
குளிர்காலத்தில் ஏற்படும் நோயுடன் இந்த நோயின் தாக்கம் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது