ஈராக்கில் இராணுவ தளத்தை அமைக்கும் துருக்கி – பதட்டமாகும் களமுனை
துருக்கிய நாட்டு இராணுவம் வடக்கு ஈராக்கின் பகுதிகளில் பெரும் இராணுவ தளத்தை அமைத்து வருகிறது ,
அங்கு தமது தாயக மீட்புக்கு போராடி வரும் குருதிஸ் போராளிகள் மீது தாக்குதல் தொடுக்கும் முகமாக இந்த பிரமாண்ட இராணுவ தளத்தை துருக்கிய இராணுவம் அமைகிறது
கனரக வாகனங்கள்,டாங்கிகள், ஏவுகணைகள்,பல்குழல் பீரங்கிகள்,என்பன குவிக்க பட்டு வருகின்றன
அமெரிக்கா அதரவு பெற்று போராடி வந்த குருதீஸ் போராளிகள் இன்று அதே அமெரிக்காவினால்
கைவிட பட்ட நிலையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன
இதனால் பேரழிவில் உள்ள போராளிகள் குழுவை முற்றாக அழித்துவிட வேண்டும் என துருக்கி
முனைந்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது