ஈரானை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இராணுவ முகாம்கள் தகர்த்து அழிப்பு ,வெடித்து சிதறிய ஏவுகணைகள் ,ஆயுத வண்டிகள்
தாக்குதல்
சிரியா நாட்டில் தளம் அமைத்து அந்த நாட்டின் அரச இராணுவத்திற்கு நேரடியாக உதவி புரிந்து வரும் ஈரான் இராணுவ
தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது
அவ்வாறு தலைநகரை அண்மித்த பகுதியில் இயங்கி வந்த மிக பெரும் இராணுவ முகமக்கள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
சிரியா இராணுவத்தின் வான் காப்பு இராணுவத்தினர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பொழுதும் ,அதன் இலக்கில்
இருந்து தவறிய ஏவுகணைகள் குறித்த சில முகாம்கள் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,இதன் போது அங்கு பெரும் வெடி சத்தங்கள்
கேட்டதாவும் இதனால ஈரான்,சிரியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
சிரியா இராணுவம் மறுப்பு
இஸ்ரேல் இராணுவத்தினர் ஏவிய ஏவுகணைகளில் அதிகமானவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளன, எனினும் ஒரு சில தவறி வீழ்ந்து
வெடித்துள்ளன ,எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
இரகசிய ஏவுகணை கையளிப்பு
சுமார் பதின்மூவாயிரம் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து சிரியா வாங்கி குவிந்திருந்த நிலையிலும் ,அதே சம அளவான
ஏவுகணைகளை ஈரான் வழங்கி இருந்த நிலையிலும் இஸ்ரல் ஏவுகணைகள் அச்சுறுத்தல் குறித்த இரண்டு நாட்டு இராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ளது
ஹிஸ்புல்லா
ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு கிளர்ச்சி படைகளிற்கும் ஈரான் ஏவுகணைகளை தாரளமாக
வழங்கியுள்ளது ,ஹிஸ்புல்லாவிடம் சுமார் ஒரு லட்சம் ஏவுகணைகளை ஈரான் வழங்கியுள்ளது ,
இஸ்ரேல் மீது ஈரான் உருவாக்கிய மூன்று நாட்டு கிளர்ச்சி படைகள் மற்றும் இராணுவ அமைப்புக்கள் சமவேளை தாக்குதல்களை
தொடுக்கலாம் என்ற நிலையில் அவர்கள் முந்திட முன்னர் இஸ்ரேல் இந்த தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது
இதன் மூலம் விரிவு படுத்தப்படவுள்ள பெரும் தாக்குதல்களை சிதறடித்து அதில் இருந்து தமது நாட்டை தற்காத்து கொள்ளலாம்
என இஸ்ரேல் கணக்கு போட்டுள்ளது ,இது எதுவரை சாதகமாக அமையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.