இலங்கை தமிழர்களை கட்டாய படுத்தி அனுப்ப மாட்டோம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Spread the love

இலங்கை தமிழர்களை கட்டாய படுத்தி அனுப்ப மாட்டோம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலுஇ தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போதே அமைச்சர் செஞ்சி மஸ்தான் இவ்வாறு குறிப்பிட்டார் என்று தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் 110ன் விதியின் கீழ் இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்தில் 108 முகாம்களில் வசித்து வருகின்றனர். 2 முகாம்கள் காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது. மற்ற 106

முகாம்களில் 12 முகாம்களுக்கு சென்று நான் ஆய்வு செய்த போது, அந்த ஆய்வின் அறிக்கையின் படி முதல்வர் கலைஞரின் திட்டம் தொடரவேண்டும் என்று அகதிகள் தெரிவித்தனர்.

317 கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு உணவு. உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் புதிதாக வீடுகள் கட்டி தரக்கூடிய திட்டம், கல்வி திட்டம், படித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில்

வேலை வாங்கி தரும் நிலையை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கபட்டு அவை செயல்படுத்தபட்டு தொடர்ந்து அரசின் உத்தரவுகளை நிறைவேற்றபட்டு வருகிறது.

18 அரசாணைகளை முதல்வர் போட்டுள்ளார். தற்போது கூட 3 அரசாணைகளுக்கு நான் கையொப்பமிட்டு வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எப்போதும் இலங்கை தமிழர்களை

காப்பவர்களாக இருப்போம். யாரையும் கட்டாயபடுத்தி இலங்கை அனுப்பமாட்டோம், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply